வெங்காய விளைச்சல் பாதிப்பு எதிரொலி : ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியார் வியாபாரிகள் முடிவு
Nov 20 2019 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியார் வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. சில்லறை கடைகளில் கிலோ 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெங்காயம் இறக்குமதி செய்ய தனியார் வியாபாரிகள் மற்றும் அரசு வாணிப நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இறக்குமதிக்கான விதிமுறைகளையும் தளர்த்தி உள்ளது.
இதை பயன்படுத்தி, வியாபாரிகள், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளதாக மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த மாதத்துக்கு இன்னும் நிறைய வெங்காயம் வாங்க உள்ளதாகவும், இதன் மூலம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், அரசு வாணிப நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.