ஜெருசலேம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு உதவித் தொகை உயர்வு: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு அறிவிப்பு
Nov 20 2019 7:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெருசலேம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் கிருஸ்தவர்களுக்கான உதவித் தொகையை முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக அந்த மாநில தலைமைச் செயலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை உள்ள கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது இதுவரை 40 ஆயிரம் ரூபாய் வரை ஆந்திர மாநில அரசு உதவித்தொகை அளித்து வந்தது என்றும் இப்போது, இந்தத் தொகை 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவா்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகையான 20 ஆயிரம் ரூபாயை இனி 30 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களுக்கும் இதே அளவில் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.