பொது இடங்களில் தலைவர்களின் சிலை வைக்கும் விவகாரம் -புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சரிடையே மீண்டும் வலுக்கிறது மோதல்
Nov 20 2019 7:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பொது இடத்தில் தலைவர்களின் சிலையை வைக்கக் கூடாது என்று கிரண்பேடி கூறியது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரு.நாராயணசாமி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரி தலைமை செயலகத்தில் நிதி தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் திரு.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கடந்த பட்ஜெட்டில் 95 சதவீத நிதி செலவு செய்யப்பட்ட நிலையில், 100 சதவீத நிதியை செலவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.