இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வருகை - மத்திய அரசின் அழைப்பை ஏற்று முடிவு
Nov 20 2019 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து. அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் திடீர் பயணமாக, நேற்று கொழும்பு சென்றார். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த அவர், இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, வரும் 29-ஆம் தேதி, கோத்தபய ராஜபக்சே, டெல்லி வருவது உறுதியாகி உள்ளது.