டெல்லியில் காற்று மாசு வரும் நாட்களில் மேலும் மோசமாகும் - இன்றும் காற்று மாசு பிரச்சினையால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்பு
Nov 20 2019 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காற்று மாசு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமென வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, லோதி சாலை பகுதியில் காற்று மாசின் குறியீடுகளான PM 2.5 மற்றும் PM 10 ஆகியவற்றின் தரக்குறியீட்டு எண் முறையே 204 மற்றும் 210 ஆக பதிவாகியிருந்தது. இது காற்றின் தரம் மிக சராசரியாக இருப்பதைக் குறிப்பதாகும். அடுத்த 2 நாட்களில் காற்று மாசு மேலும் அதிகரித்து, மோசமான நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக என வானியல் ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.