மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்கும் பணி தொடங்கியது : வரும் 1-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் - சஞ்சய் ராவத்
Nov 21 2019 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும், வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும், சிவசேனா மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்ட்ராவில் கடந்த 12ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க சிவசேனா தீவரம் காட்டி வருகிறது. ஆட்சி அமைக்க 3 கட்சிகள் இடையேயும், உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும், வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும், சிவசேனா எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திரு. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆசியவை, மும்பையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.