சத்தீஷ்கர் மாநிலத்தில் யானைத்தந்தங்களை கடத்த முயன்ற 8 பேர் கைது - மாயமாகியுள்ள 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
Nov 21 2019 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஷ்கர் மாநிலத்தில் யானைத்தந்தங்களை கடத்த முயன்ற எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாயமாகியுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்தீஷ்கர் மாநிலம் Sonhat கிராமத்திற்கு அருகேயுள்ள Raghunathnagar வனப்பகுதியில் சிலர் யானைத்தந்தங்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து Sonhat கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக எட்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர். சம்வவத்தில் தொடர்புடைய 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.