பி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு
Nov 21 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனம் வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனம், வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி காலை 9.28 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் வரும் 25-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 வணிக நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. பூமி கண்காணிப்பு மற்றும் தொலை உணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள், மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோள் என்றும், துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.