பி.எஸ்.எல்.வி.-சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு

Nov 21 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனம் வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனம், வரும் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி காலை 9.28 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் வரும் 25-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.எல்.வி.- சி-47 ஏவு வாகனத்தில், இந்தியாவில் தயாரிக்‍கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்‍கோள் மற்றும் அமெரிக்‍காவின் 13 வணிக நானோ வகை செயற்கைக்‍கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. பூமி கண்காணிப்பு மற்றும் தொலை உணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்‍கோள், மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்‍கோள் என்றும், துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00