இந்தியர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் : தவறுக்கு வருத்தம் தெரிவித்தது வாட்ஸ்அப் நிறுவனம்
Nov 21 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், வாட்ஸ்அப் நிறுவனம், தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியர்கள் தலைவர்களின் வாட்ஸ்அப் தகவல்களை இஸ்ரேல் நிறுவனம் உளவுபார்த்தகாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என வாட்ஸ்அப் நிறுவனமும் ஒப்புதல் அளித்தது. இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இப்போது இதற்கு பதிலளித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.