6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்
Dec 7 2019 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போனதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 52,272 குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 47,744 குழந்தைகளும், குஜராத்தில் 43,658 குழந்தைகளும், டெல்லியில் 37,418 குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார். மேலும் காணாமல் போன குழந்தைகளின் முழு விவரங்களும் Track Missing Child மற்றும் Khoya-Paya ஆகிய வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
இந்த இரு வலை தளங்களிலும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி வரை 3 லட்சத்து 18 ஆயிரம் குழந்தைகள் குழந்தைகள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளன என ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.