இந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வில் தகவல்
Dec 7 2019 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பாம்பு கடி காரணமாக ஆண்டொன்றுக்கு 46 ஆயிரம் பேர் உயிரிழப்பதோடு ஒரு லட்சத்துக்கு 40 ஆயிரம் மக்கள் ஊனமுறுகின்றனர். இத்தகைய பாம்பு கடிகளுக்கு பாம்பின் விஷத்தை கொண்டே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பாதிப்பை குணப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என இந்திய அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய விஷத்தன்மை அதிகமுள்ள பாம்பு கடிக்கு பாலிவெலண்ட் விஷ முறிவு மருத்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதேபோல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஏனைய பாம்புகளும் உள்ளன. எனினும் மேற்கூறிய நான்கு பாம்புகள் கடிக்கு வழங்கப்படும் விஷ முறிவு சிகிச்சையே பிற பாம்புகடிக்கும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.