புதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்
Dec 7 2019 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் முதன் முறையாக அனைத்து மகளிர் தபால் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள்.
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், தலைமை தபால் அலுவலகங்கள் உள்பட 365 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தபால் துறையில் முழுக்க முழுக்க பெண் பணியாளர்களை கொண்டு அனைத்து மகளிர் தபால் நிலையங்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் முதன்முறையாக புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரம அஞ்சல் அலுவலகம், இன்று முதல் அனைத்து மகளிர் தபால் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. நிலைய அதிகாரியை தொடர்ந்து கடிதங்களை பட்டுவாடா செய்பவர் வரை உள்ள ஊழியர்கள் அனைவரும் இங்கு பெண்களாகவே இருப்பார்கள்.