பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் - சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு

Dec 9 2019 9:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகள், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை, அம்மாநில அரசு அமைத்துள்ளது.

ஐதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவர் ஒருவர், நான்கு பேர் ‍அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை, அண்மையில், சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்ற ‍போது, அவர்கள் போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றனர்.

அப்போது, போலீசார் நடத்திய என்கவுன்டரில், நான்கு பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க, மத்திய உள்துறை அமைச்சகமும், தேசிய மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, ரச்சகொண்டா காவல் ஆணையர் திரு. மகேஷ் எம் பக்வத் தலைமையில், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து,​ தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தி, மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00