ஆட்சியை தக்கவைத்துக்கொள்கிறார் எடியூரப்பா - இடைத்தேர்தலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க முன்னிலை
Dec 9 2019 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 12 இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடாகவில் காலியாக இருந்த 17 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு, கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 மையங்களில், பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எல்லபூர் தொகுதி பாஜக வேட்பாளரான அரபெயில் சிவராம் ஹெப்பர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிமன்னா நாயக்கை விட 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக முன்னிலையில் இருப்பதால் முதலமைச்சர் திரு. எடியூரப்பா தனது மகனுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.