என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பான வழக்கு : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Dec 9 2019 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் நடைபெற்ற என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நான்கு பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பதப்படுத்தி பாதுகாப்போடு வைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. நான்கு உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதை விடியோவில் பதிவு செய்து அதனை மஹபூப்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று காலை 10. 30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00