நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அறிக்கை தாக்கல் வேண்டும் - கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dec 9 2019 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தில், தனது இரு மகள்களையும் கடத்தி வைத்திருப்பதாக, ஜனார்த்தனா ஷர்மா என்பவர் புகாரளித்தார். இதுமட்டுமின்றி, நித்தியானந்தா மீது, மேலும் பல புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் ஹீராபூர் பகுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதனிடையே லெனின் கருப்பன் என்பவர் ராம் நகர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 44 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து வரும் 12-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.