ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனு - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை
Dec 10 2019 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து தனி நபர்கள், ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினர் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, கடந்த நவம்பர் 14-ஆம் தேதி இந்த மனுக்கள் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணா தலைமையில், நீதிபதிகள் எஸ்கே கௌல், ஆர் சுபாஷ் ரெட்டி, பி.ஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 100 நாள்களைக் கடந்தும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.