ஒடிசாவில் அரசு கட்டடத்தின் கழிவறையில் வசித்து வரும் மூதாட்டி : மூதாட்டிக்கு அரசு சார்பில் வீடு வழங்க பொதுமக்கள் கோரிக்கை
Dec 10 2019 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா மாநிலத்தில், வீடு இல்லாதால் வறுமையில் வாழும் மூதாட்டி ஒருவர், அரசு கட்டி கொடுத்த கழிவறையில் 3 வருடமாக வாழ்ந்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது. மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்த திரெளபதி பகேரா என்ற மூதாட்டி, மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். அவருக்கு அரசு வீடு ஒதுக்காதால், அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த மிக குறுகிய அளவிலான கழிவறையில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 3 வருடமாக கழிவறையில் வசித்து வரும் அவர், அங்கேயே சமையல் செய்வதும், இரவில் தூங்குவதுமாக தனது வாழ்க்கை கழித்து வருகிறார். இரவு நேரத்தில் மகளும், பேரனும் கழிவறையின் வெளியே தூங்கி கொள்கின்றனர். இவர்களுக்கு, அரசு சார்பில் கட்டப்படும் வீடு வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.