உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் : உ.பி.-யில் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு
Dec 10 2019 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உன்னாவ் சம்பவத்தை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்ணை குற்றவாளிகளே தீவைத்து கொளுத்தினர். இதில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. இந்நிலையில் லக்னோவில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அம்மாநிலம் முழுவதும் 218 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள், விரைந்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.