குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்‍கு எதிர்ப்பு : அசாமில் மாணவர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டம்

Dec 10 2019 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமின் பல்வேறு பகுதிகளிலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்‍களவையில், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாமில் Dibrugarh நகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் டயர்களை கொளுத்தியும், மறியலில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

இதேபோல், கவுகாத்தி நகரிலும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்த மசோதவை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். அசாம் மாநிலத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 நாட்களாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00