நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு : மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி அக்ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
Dec 10 2019 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் சிங், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
பவன்குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. குற்றவாளிகள், எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 4 குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் சிங், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான்.