நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு - இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
Dec 13 2019 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்ட மசோதா, இ-சிகரெட் தடை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் 14 மசோதாக்கலும், மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு இன்றுடன் நிறைவுபெற்றது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.