உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 34-வது இடம்
Dec 13 2019 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டில், அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2-வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3-வது இடத்திலும் உள்ளனர். முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 34-ம் இடத்தில் உள்ளார்.
பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் 6-வது இடத்தையும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா 29-வது இடத்தையும், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் 38-வது இடத்தையும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப் 42-வது இடத்தையும், டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 81-வது இடத்தையும், பருவநிலை மாற்றம் தொடர்பாக போராடி வரும் கிரிட்டா தன்பர்க் 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.