புதுச்சேரியில் பொதுப்பணித்துறை பொறியாளரை தாக்கிய சிசிடிவி காட்சி - மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக புகார்
Dec 14 2019 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், பொதுப்பணித்துறை பொறியாளரை, மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் பொறியாளர் செல்வராஜ், பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, சத்யா நகர் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து, அவரை தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையிலும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக புகார் எழுந்துள்ளது.