மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் எண்ணிக்கை முரண்பாடு உள்ளதாக எழுந்த புகார் - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Dec 14 2019 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தலில், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் முரண்பாடாக உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற மனுக்களுடன் சேர்த்து இந்த மனுக்களும் விசாரிக்கப்படும் என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். நடந்த முடிந்த மக்களவை தேர்தலின்போது வாக்கு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வேறுபாடு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.