வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
Dec 14 2019 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நிலவும் சூழல் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும், சீனா, பங்களாதேஷ், பூடான் ஆகிய நாடுகள் உடனான இந்தியாவின் வெளியுறவு பின்னடைவை சந்திக்க கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த பிரதமர் திரு. நரேந்திர மோதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.