சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்படுமா? : பதிலளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு
Dec 14 2019 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதார சரிவை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துவரும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. வரி வசூல் குறைந்து வருவதால், வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில், பல்வேறு பொருட்களுக்கான சரக்கு-சேவை வரிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திருமதி. நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக இனிதான் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.