பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிப்பு - மத்திய அரசு தகவல்
Dec 15 2019 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள், திரு. பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் திரு. ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமதி. மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ், ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் வைக்க முடியும். இந்நிலையில், திரு. பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல், மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.