மன்னிப்பு கேட்பதற்கு, தான் ஒன்றும் வீர் சாவர்கர் இல்லை என தெரிவித்த ராகுல்காந்தி - நேரு, காந்தி போல வீர் சாவர்கருக்கும் மரியாதை தர வேண்டும் என்று சிவ‍சேனா அறிவுரை

Dec 15 2019 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மன்னிப்பு கேட்பதற்கு தான் ஒன்றும், வீர் சாவர்கர் இல்லை என்று தெரிவித்த ராகுல் காந்திக்கு, நேரு, காந்தி போல வீர் சாவர்கருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று, சிவசேனா கட்சி அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி, பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மேக் இன் இந்தியா திட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய திரு. ராகுல் காந்தி, மன்னிப்புக் கேட்க, தான் வீர் சாவர்கர் இல்லை என்றும், உண்மையை பேசியதற்காக மன்னிப்புக் கேட்கும் பழக்கம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். திரு. ராகுல் காந்தியின் இந்த கருத்து, கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சிவசேனா கட்சி மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேரு - காந்தி போல, தனது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வீர் சாவர்கர் என்றும், இது போன்ற பெரிய தலைவர்களை மதிக்க வேண்டியது அவசியம் என்றும் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00