டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
Dec 16 2019 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமான வரி சேவைகளின் பலன்களைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன், பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. அந்த வகையில், வரும் 31-ம் தேதிக்குள், அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி நாள் என்று, வருமான வரித்துறை அறிவித்தது. இந்நிலையில், அந்தக் காலக்கெடுவை, இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டது. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்குப் பதிலாக, ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.