என்.எல்.சி பாய்லர் விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு - ஊழியர்கள் அதிர்ச்சி
Jul 7 2020 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி பாய்லர் விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலனில் கடந்த 1-ம் தேதி பாய்லர் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும், சிகிச்சை பலனின்றி ஒருவரும் என 7 பேர் பலியானார்கள். 16 பேர் பலத்த காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இதனால் என்.எல்.சி ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.