திண்டுக்கல்லில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் : தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து கருத்துக் கேட்பு
Dec 2 2020 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கழகத் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில், திண்டுக்கல்லில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ராமுதேவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தலில் பணியாற்றும் விதம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக தேர்தல் அறிக்கையில் மக்களின் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமமுக தலைமை நிலைய செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஐ.மகேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.தங்கதுரை, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கழக தேர்தல் பிரிவு செயலாளரும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான திரு.என்.ஜி.பார்த்திபன், கழக அமைப்புச் செயலாளர் திரு.இல.கதிர்காமு, கழக அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.ஆர்.செல்வபாண்டி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். மேலும் அமமுக செய்தி தொடர்பாளர் திரு.வீர. வெற்றிபாண்டியன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.ஜோதி முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.