முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இல்லத்தில் இருந்து 34 லட்சம் ரூபாய் ரொக்கம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் : 275 யூனிட் மணல் குவித்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
Sep 17 2021 7:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இல்லத்தில் இருந்து 34 லட்சம் ரூபாய் ரொக்கம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.சி.வீரமணி இல்லத்தில் சோதனை நடத்தினர். கே.சி.வீரமணியின் இல்லத்தில் இருந்து 34 லட்சத்து, ஆயிரத்து 60 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கணினி ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7 புள்ளி இரண்டு கிலோ கிராம் வெள்ளிப் பொருட்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கே.சி. வீரமணியின் வீட்டு வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்து கண்டறியப்பட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.