பரம்பரை சொத்தை பட்டா மாறுதல் செய்ய ரூ.50,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது
Oct 27 2021 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பரம்பரை சொத்தை பட்டா மாறுதல் செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வட்டாட்சியரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், கொட்டப்பட்டில் உள்ள தன்னுடைய பரம்பரை சொத்தை, நிலவரி திருத்தம் செய்ய வட்டாட்சியர் கோகுல் என்பவரை அணுகியுள்ளார். நிலவரி திருத்தம் செய்ய கோகுல் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புதுறையினர் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.