புனித ரமலான் நோன்பையொட்டி நாகூர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை - ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்பு
Mar 24 2023 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ரமலான் நோன்பை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைப்பெற்றது. இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கிய நிலையில், உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.