கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்த கோயில் திருவிழாவில் வாண வேடிக்கையால் மிரண்ட யானை, மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததால் அனைவரும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்
Jan 20 2018 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் கொல்லத்தின் கொட்டியம் கழுத்துலா ஸ்ரீகணபதி கோயிலில் நேற்று இரவு தை மாத திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹரி ஷங்கர் என்ற யானை அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இந்நிலையில், கோயில் திருவிழாவில் நடைபெற்ற வாண வேடிக்கை மற்றும் பட்டாசு சத்தத்தால் மிரண்டு போன யானை ஹரி ஷங்கர், அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
அப்போது சிலர் அந்த யானையின் வாலை பிடித்து இழுத்து அபாய கரமான முறையில் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமுற்ற யானை, பக்தர்களை தாக்கியதுடன், கடைகள், வாகனங்களை நொறுக்கியது.
மிரண்டுபோன யானை குறித்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு உடனடியாக விரைந்த அவர்கள், மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.