பீகாரில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக்கட்டடம் - மாணவர்கள் இடமாற்றத்தால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
Sep 17 2019 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகாரில் பள்ளி கட்டிடம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது.
பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. பாட்னா, கயா, ராஞ்சி ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், கட்டிஹர் பகுதியில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த பள்ளிக் கட்டிடம் ஒன்று, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கட்டடம் நீரில் மூழ்கியபோது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.