2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பபெறும் அறிவிப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்... எந்த விதமான அடையாள சான்றிதழையும் காண்பிக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு..
May 29 2023 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆவணங்கள் ஏதுமின்றி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. செப்டம்பர் 30-ம் தேதி வரை, மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆவணங்கள் ஏதுமின்றி வங்கிகளில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.