பப்புவா நியூ கினியா பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா புறப்பட்டார் பிரதமர் மோடி : சிட்னியில் இந்திய வம்சாவளிகளை சந்தித்து பேச திட்டம்
May 22 2023 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் மோடியிடம் தம்பதியினர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியபோது அவரும் மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3வது இந்திய-பசிபிக் தீபகற்ப ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட தயாரானார். அப்போது, போர்ட் மோர்ஸ்பியில் பிரதமர் மோடி புறப்பட தயாரானபோது, தம்பதியினர் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அந்த சமயத்தில், பிரதமரும் வணங்கி மரியாதை செலுத்தி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.