ரஃபேல் வழக்‍கு தொடர்பாக தாக்‍கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு - உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

Nov 14 2019 7:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான சீராய்வு மனு மீது, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. யஷ்வந்த் சின்ஹா, திரு. அருண் ஷோரி, மூத்த வழக்‍கறிஞர் திரு. பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மி எம்.பி. திரு. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்றும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறி வழக்‍கை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான சீராய்வு மனு மீது, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00