கேரள மாநிலம் சபரிமலையில் மகர விளக்‍கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் : லட்சக்‍கணக்‍கில் குவியும் பக்‍தர்கள்

Jan 14 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் சபரிமலையில் நாளை மகர விளக்‍கு பூஜை மற்றும் ஜோதி தரிசனத்தையொட்டி, லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை 6.45 மணிக்‍கு மகர விளக்‍கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையின்போது, சுவாமிக்‍கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணப்பெட்டி ஊர்வலம் நேற்று பந்தளம் அரண்மனையில் இருந்து தொடங்கியது. மேளதாளம் முழங்க நடைபெறும் இந்த ஊர்வலம் நாளை மாலை சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். அதன்பின் 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறும். அப்போது, அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவது ஐதீகம் என்பதால், ஜோதி தரிசனத்தை காண லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00