படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா : ஹெத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு

Jan 14 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். எத்தையம்மன் கோவில் திருவிழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கொண்டாடபடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கோத்தகரி அருகே உள்ள பேரகணியில் தொடங்கியது. இதனையடுத்து உதகை அருகே உள்ள ஜெகதளாவில் எத்தை பண்டிகை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரம்பரியமான வெண்மை நிற ஆடைகளை அணிந்து ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கெகதளாவிற்கு வந்திருந்தனர். அருகில் உள்ள கோவிலில் ஹெத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.

அப்போது ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ஹெத்தையம்மனுக்கு முன்பு ஏராளமான படுகர் இன இளைஞனர்கள் பல்வேறு வித பாரம்பரிய நடனங்களை ஆடிவந்தனர். படுகர் இன மக்கள் பாரம்பரிய முறைபடி வெண்மை நிற உடை அணிந்து கொண்டாடிய எத்தை பண்டிகை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00