பொங்கலையொட்டி முக்கிய கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் - ஏராளமானோர் குடும்பத்துடன் தரிசனம்
Jan 15 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையொட்டி, பல்வேறு ஆலயங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் திருவிழாவை, வீடுகளில் பொங்கலிட்டு உற்சாகமடைந்த பொதுமக்கள் பின்னர், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருப்பட்டூர் பிரம்மா கோவில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது. தைப்பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படும் சாரங்கபாணி திருக்கோவிலில், முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. திருத்தேரில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி உடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.