ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 16 2020 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 10ம் திருநாளில் நடைபெற்ற நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு, பரமபத வாசல் வழியாக, சந்திரபுஷ்கரணி குளத்தை வந்தடைந்து, தீர்த்தவாரி கண்டருளினார். இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனிதநீரை தெளித்துக் கொண்டு பக்தி பரவசமடைந்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழா, நாளை அதிகாலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.