தஞ்சையில் உள்ள கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை - கோயில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்

Jan 19 2020 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள ஜைன கோவிலில், 9 வெண்கல சிலை மற்றும் ஒரு ஐம்பொன் சிலை கொள்ளையடிக்‍கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை கரந்தை, ஜெனமுதலி தெருவில் அமைந்துள்ள ஆதிஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ள சுவரில் ஏறி குறித்த கொள்ளையர்கள், கோயிலின் உட்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து, 3 அடி உயரமுள்ள ஆதிஸ்வரர் ஐம்பொன் மூலவர் சிலையை கொள்ளையடித்தனர். மேலும், சரஸ்வதி, சோலமணி, பஞ்சநதீஸ்வரர், நநீஸ்வர், நவகிரக தீர்தங்கர், மகாவீரர் உள்ளிட்ட 9 வெண்கலச் சிலைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை கோயில் கதவைத் திறந்த குருக்கள் ஜாலேந்திரன், சிலைகள் மாயமானது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எஸ்.பி மகேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர், மோப்பநாய் உதவியுடன் கோயிலை ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில் உள்ள இரண்டு சிசிடிவி கேமராக்கள் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. சிலைகளை கொள்ளையடித்தபின் கோயில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர். மிளகாய் பாக்கெட்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00