கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Jan 20 2020 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆற்றுத் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். ஆற்றுத் திருவிழாவையொட்டி மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, ஆதி திருவரங்கம், முகையூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த சாமிகள் கலந்து கொண்டன. இதனைத்தொடர்ந்து சாமிகளுக்கு மண்டகப்படி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைப்பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.