திருப்பதியில் தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு வழங்கப்படும் - அமலுக்கு வந்தது புதிய திட்டம்
Jan 21 2020 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று முதல் அமலாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, சலுகை விலையில் 70 ரூபாய்க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. அதேநேரத்தில் மலைப்பாதை வழியே கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. கூடுதலாக லட்டு பெற விரும்பும் பக்தர்களுக்கு, ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.