சபரிமலை ஐயப்பன் கோயிலில் முடிவுக்கு வந்த மகர விளக்கு பூஜைகள் - கோயில் நடை அடைப்பு
Jan 21 2020 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகள் முடிந்ததையடுத்து, கோயில் நடை இன்று காலை சாத்தப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 31-ம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிலையில், மகர விளக்கு கால பூஜைகள் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, நேற்று இரவு பக்தர்கள் அனைவரும் மலையில் இருந்து இறங்கினர். இன்று காலை 6 மணி அளவில் பந்தளம் மன்னர் ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து, 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 13ம் தேதி, சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.