தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Jan 23 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 5-ம் தேதி, அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இதற்கு பதிலாக அடுத்தமாதம் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.