திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கெங்கையம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Jan 23 2020 7:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கெங்கையம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சின்னகிரிசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, குண்டங்கள் அமைத்து இரண்டு கால யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.